Skip to main content

யாரோ தமிழர்களாம்..

திமுக, நாம் தமிழரை எதிர்க்க ஒரு தனி பிரிவையே களம் இறக்கியிருக்கு.  நாடாளுமன்ற உறுப்பினர்கள், பேச்சாளர்கள், இதர கூட்டணி கட்சி பிரமுகர்கள் என்று ஒரு பெரும் படையே நாம் தமிழரை சமாளிக்க களம் இறக்கப்பட்டிருக்கு. 

சாதி, மதம், பணம் மூன்றும் ஒரு சேர அணிவகுத்து திமுகவின் அரணாக நிற்கிறது. ஆதிக்கம் எனும் யானைகள் மீது பண்ணையார்களின் மக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஊடகம் எனும் புரவி மேலே பல சாதியவாதிகள் ஊடறுக்க காத்திருக்கின்றனர்.

மெலிந்த கூட்டணி இதர கட்சிகள், பாரமான கேடயங்களை ஏந்தியப்படி பண்ணையார்களின் யானைகளுக்கு காவலாக நிற்கின்றனர்.

டாஸ்மாக் மதுவின் நாற்றத்தையும், வன்முறை, கலவர புழுதியையும், சுவாசித்தப்படி இருநூறுவர் கூட்டம் அணிவகுத்து நிற்கிறது.

அவர்களுக்கு நேரெதிரே தமிழினம்!
புலிக்கொடி ஏந்தி ஒரு படை!
அதில்,
பெண்களும் ஆண்களும் சரி சமமாக களத்தில் நிரம்பி நிற்கிறார்கள்.

மனிதர்களை தாழ்வாக பார்க்கும் ஆதிக்க யானைகள் மேல் துஞ்சும் பண்ணையார் குஞ்சுகள் அங்கில்லை.
எல்லோரும் சமநிலையில் தோளோடு தோள் உரசி நிற்கிறார்கள்..

சாதியவாதிகள் இயக்கும் ஊடக புரவிகள் தமிழர் படையில் இல்லை,
உண்மை எனும் ஜீவ நதி மட்டுமே  அவர்கள் மனோபலத்துக்கு வலு சேர்த்துக்கொண்டிருக்கிறது..

பணம் படைத்த பண்ணையார்கள் அங்கில்லை,
குணம் படைத்த மாந்தர் பலர், இனம் காக்க படையென அங்கு கூடி நிற்கிறார்கள்.

ஒரு சிறு புலி கூட்டத்தை எதிர்க்க இவ்வளவு பெரிய திராவிட படையா?

போர்க்கள தராசில் திமுகவின் பக்கம்

பண்ணையார்களின் ஆதிக்க யானைகள், சாதியவாதிகளின் ஊடக புரவிகள், கூட்டணி கேடயங்கள், ஆட்பலம், பண பலம், எல்லாம் அணிவகுத்து நிற்கிறது,

நாம் தமிழரின் பக்கம் தமிழினத்தின் தன்மானமும், இன உணர்வும், அறமும் அணிவகுத்து நிற்கிறது..

திமுகவின் பக்கம் இன்னும் நிறைய பேர் தேவைப்படுகிறார்கள், இன்னும் நிறைய பாரம் தேவைப்படுகிறது.  திராவிடத்துக்கு இன்னும் நிறைய பணம், பலம் தேவைப்படுகிறது.

தமிழர் அறத்தை வீழ்த்தும் வலிமையுள்ள திராவிட போர் வாள்கள் திமுகவுக்கு தேவைப்படுகிறது..

தமிழர்களின் தன்மானத்தை வீழ்த்த டெல்லியில் இருந்து இன்னும் நிறைய அரசியல் தந்திரோபாய நிபுணர்கள் திமுகவுக்கு தேவைப்படுகிறது,

தமிழர்களின் ஒற்றுமையை கலைக்க இன்னும் நிறைய கூட்டணி சிப்பாய்கள் கேடயங்களாக தேவைப்படுகிறார்கள்..

வெறியேற்ற ஒரு முரசம்,
தடவி கொடுக்க ஒரு கை,
பசி தீர்க்க நல்ல மாங்கனி
வெற்றி பெற்றால்
செங்கோலுக்கு ஏதுவாக ஒரு
தாமரை மலர் கொத்து,
என பல ஆசைகளுடன் களத்தில் நிற்கிறது திமுக..


எதிரே இருப்பது ஒரு சிறு புலிப்படை,
யாரோ தமிழர்களாம்..

-Mr. பழுவேட்டரையர்
19/2/2021

Comments

  1. உண்மையான கள நிலவரம் எதிர்த்து சண்டை போடுவோம். உங்கள் போராட்டம் காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  2. Best Motivational thread for NTK.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு
    உண்மைகளை உரக்கச் சொல்வோம்.
    திராவிடனா தமிழனா தலைப்பில் உறவுகளை உற்சாகப்படுத்தும் விதமாக கட்டுரை ஒன்று எழுதுங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற