Skip to main content

புகைப்படங்கள்

கடந்த 10 வருடங்களில் மேற்கொண்ட எனது பயணங்களில்,.. உணவு, இடங்கள், ஊர்கள், என்று நான் எடுத்த சில புகைப்படங்கள்... 

நினைவுகளை போல் ஒழுக்கமற்ற 
தொகுப்பாய்,
கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..

Randomஆ
இங்கும் அங்குமாக.

.


நீர்கொழும்பு, 
சிங்கள தேசம்.
அதிகாலை 4.00 மணிக்கு ..
2017 December. 


யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள வைரவர்/முனியப்பர்.. இவரிடம் உத்தரவு வாங்காம கடந்ததில்லை..

2017 December.

புங்குடுதீவு கண்ணகி அம்மன்.. 
அபரணை பரோட்டா. 

சிங்கள தேசம் 
March 2014 
காலை உணவு.. 

காத்தான்குடி 

ஒரு மாலை பொழுதில்,
கிழங்கு - Tsunami Set

2014 அழுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக
கலவரம் நடந்த மாதத்தில் அங்குள்ள நண்பர்களை சந்திக்க சென்ற போது எடுத்த புகைப்படம். 

அவிசாவளையில் உள்ள கோவில் ஒன்று..

நாட்டார் தெய்வங்கள் வழிபடப்படும் கோவில்.. 

யாழ்ப்பாணம்..
கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்..

இலங்கை விமான படையின் தாக்குதலுக்கு பின் மிஞ்சியது.. 

யாழ் நூலகத்திற்கு, சிறு வயதில் இருந்து நான் சேகரித்து வாசித்த முக்கியமான புத்தகங்களை அன்பளிக்க சென்ற போது, Librarian அக்கா busyஆக UK Prime Ministerக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். 

"இருங்கோ தம்பி வாரன்" எண்டுட்டு அக்கா வெளிய போன போது clickகியது. 😂 

ஈழம்
பாலாவி | மாதோட்டம்... 


கல்பிட்டிய,

சிங்கள தேசம். 

தந்தை செல்வா.

மன்னார் 
China Bay துறைமுகம், திருகோணமலை

(2014) 

தலவில அன்னம்மாள் தேவாலயம்.

சிங்கள தேசம். 


அனுராதபுரம்.(2013)

சிங்கள கடை ஒன்றில் காலை உணவை முடித்துவிட்டு

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன ஓட்டுநர் அண்ணேயிடம்

"உங்களுக்கு கெஹெல்வத்தயில் லவரியா வித்த ரண்சிங்க எனும் பொடியனின் கதை தெரியமோ" எண்டு கேட்டப்படி எடுத்த புகைப்படம் .. 


கொழும்பில் கடந்த வருடம்..

நண்பர்களுடன் வழக்கமான இரவுணவு, 

மாட்டிறைச்சி கொத்தும், தேத்தண்ணியும்.. 


பொலன்னறுவ, 2013

சோழர்கள் உருவாக்கிய நகரம்.

பொலன்னறுவ வேளைக்காரர் படையின் கல்வெட்டு. 

'புத்தரின் பல்'ல பாதுகாத்த தமிழ் காவலர்கள். சிங்கள அரசன் விஜயபாகு, சோழர்களுக்கு எதிராக போரிட உத்தரவிட்ட போது, உத்தரவை மறுத்து சிங்களவரக்ளுடன் மோதி வீர காவியமான வீரர்களின் படை வேளைக்காரர் படை. 
ஒரு சில வருடங்களுக்கு முன் ஈழத்தில்,. எந்த ஊர் என்று நியாபகம் இல்லை..

தாமரை இலை மேல்
பன்றியிறைச்சி கறி, கோழியிறைச்சி கறி மற்றும் மீன்.. 


2018, யாழ்ப்பாணம்.

விடிய 6.00 மணி இருக்கும் எண்டு நினைக்கிறன், யாழ்ப்பாணம், நல்லூர் சொக்கர்(ன்) கடையில் காணும் முதல் முகம் மக்கள் திலகம் தான்.

நல்ல பால் தேத்தணி கிடைக்கும் இடம்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில்
Geoffrey Bawaவின் படைப்பு..
எந்த வருடம் எடுத்தது எண்டு நியாபகம் இல்லை.

இங்கே பலமுறை பதிவிட்ட படம் இதுவாக தான் இருக்கும், இருந்தாலும் இன்னொருக்கா,.. 
யாழ்ப்பாணத்து கறுத்த கொழும்பான் மாம்பழம்.🙂  
பிறகு நண்பர்கள் படை சூழ சாப்பிட போனால், பாலாண்டியும் பரோட்டாவும் 
Must have அல்லோ 🙂 
குருணாகல, 2014,

பொல் ரொட்டி.

சிங்கள தேசம். 

காலை உணவு (2017) 

ஈழத்தில் வழக்கமா எல்லா சைவ கடைகளிலும் கிடைக்கும் காலை உணவு...

இடியப்பம், சொதி(essential), சாம்பார், வடை, சம்பல்(essential).

(வடையை பிய்த்து இடியப்பத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்)

வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிட்டது, அதனால் பெரியாரும் இணைந்து கொண்டார்..🙂 

Comments

  1. எழுத்தும் தமிழும் ...🔥🔥!!!

    //நினைவுகளை போல் ஒழுக்கமற்ற
    தொகுப்பாய்,
    கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..

    Randomஆ
    இங்கும் அங்குமாக///

    ஈழத்து உணவுகள் ஊடான நினைவுகள் 😍✨

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

தலைவருக்கு யாரும் மரண செய்தி எழுத வேண்டாம்!

2009 மே 18- சிங்கள அரசு உலகத்துக்கு இரண்டு செய்திகளை சொன்னது.  1) விடுதலை புலிகள் இயக்கம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி  2) தேசியத் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தி.  அந்த செய்திகளுடன் சிங்களம் போர் வெற்றியை அறிவித்து முடிவுரை எழுதியது. அதனுடன், தலைவரின் மரணத்தை காட்சிப்படுத்தி ஒரு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. மே 18 தொடர்பாக உலகத்துக்கு சிங்களம் வழங்கிய narrative இது தான்.  இந்த செய்தி ஊடாக இரண்டு விடயங்களை சிங்களம் சாதிக்க துடித்தது.  1) இனப்படுகொலையை மூடி மறைத்தல், 2) போர், விடுதலை புலிகளை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்டது என்ற பொய்யை நிறுவுவது.  சிங்களத்தின் இந்த நிகழ்ச்சி நிரலை உலகத்தமிழினம் வெற்றிக்கரமாக முறியடித்து, இன்று உலகெங்கும் ஈழத்தில் நடந்தது, போர் அல்ல , இனப்படுகொலை என்பதை நிறுவி கொண்டிருக்கிறார்கள்.  இது சிங்களத்துக்கு விழுந்த பேரிடி !  தலைவரின் உடலை அலங்கோலமாக காட்டி, அதை வைத்து, அந்த நாளை அவரின் மரண செய்திக்கான நாளாக மாற்ற துடித்தது சிங்களம். அப்படி செய்வதன் ஊடாக, கவனத்தை இனப்படுகொலையில் இருந்து திசைதிருப்பலா...