Skip to main content

புகைப்படங்கள்

கடந்த 10 வருடங்களில் மேற்கொண்ட எனது பயணங்களில்,.. உணவு, இடங்கள், ஊர்கள், என்று நான் எடுத்த சில புகைப்படங்கள்... 

நினைவுகளை போல் ஒழுக்கமற்ற 
தொகுப்பாய்,
கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..

Randomஆ
இங்கும் அங்குமாக.

.


நீர்கொழும்பு, 
சிங்கள தேசம்.
அதிகாலை 4.00 மணிக்கு ..
2017 December. 


யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் நோக்கி செல்லும் வழியில் உள்ள வைரவர்/முனியப்பர்.. இவரிடம் உத்தரவு வாங்காம கடந்ததில்லை..

2017 December.

புங்குடுதீவு கண்ணகி அம்மன்.. 
அபரணை பரோட்டா. 

சிங்கள தேசம் 
March 2014 
காலை உணவு.. 

காத்தான்குடி 

ஒரு மாலை பொழுதில்,
கிழங்கு - Tsunami Set

2014 அழுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக
கலவரம் நடந்த மாதத்தில் அங்குள்ள நண்பர்களை சந்திக்க சென்ற போது எடுத்த புகைப்படம். 

அவிசாவளையில் உள்ள கோவில் ஒன்று..

நாட்டார் தெய்வங்கள் வழிபடப்படும் கோவில்.. 

யாழ்ப்பாணம்..
கீரிமலை நகுலேஸ்வரம் கோவில்..

இலங்கை விமான படையின் தாக்குதலுக்கு பின் மிஞ்சியது.. 

யாழ் நூலகத்திற்கு, சிறு வயதில் இருந்து நான் சேகரித்து வாசித்த முக்கியமான புத்தகங்களை அன்பளிக்க சென்ற போது, Librarian அக்கா busyஆக UK Prime Ministerக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். 

"இருங்கோ தம்பி வாரன்" எண்டுட்டு அக்கா வெளிய போன போது clickகியது. 😂 

ஈழம்
பாலாவி | மாதோட்டம்... 


கல்பிட்டிய,

சிங்கள தேசம். 

தந்தை செல்வா.

மன்னார் 
China Bay துறைமுகம், திருகோணமலை

(2014) 

தலவில அன்னம்மாள் தேவாலயம்.

சிங்கள தேசம். 


அனுராதபுரம்.(2013)

சிங்கள கடை ஒன்றில் காலை உணவை முடித்துவிட்டு

வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன ஓட்டுநர் அண்ணேயிடம்

"உங்களுக்கு கெஹெல்வத்தயில் லவரியா வித்த ரண்சிங்க எனும் பொடியனின் கதை தெரியமோ" எண்டு கேட்டப்படி எடுத்த புகைப்படம் .. 


கொழும்பில் கடந்த வருடம்..

நண்பர்களுடன் வழக்கமான இரவுணவு, 

மாட்டிறைச்சி கொத்தும், தேத்தண்ணியும்.. 


பொலன்னறுவ, 2013

சோழர்கள் உருவாக்கிய நகரம்.

பொலன்னறுவ வேளைக்காரர் படையின் கல்வெட்டு. 

'புத்தரின் பல்'ல பாதுகாத்த தமிழ் காவலர்கள். சிங்கள அரசன் விஜயபாகு, சோழர்களுக்கு எதிராக போரிட உத்தரவிட்ட போது, உத்தரவை மறுத்து சிங்களவரக்ளுடன் மோதி வீர காவியமான வீரர்களின் படை வேளைக்காரர் படை. 
ஒரு சில வருடங்களுக்கு முன் ஈழத்தில்,. எந்த ஊர் என்று நியாபகம் இல்லை..

தாமரை இலை மேல்
பன்றியிறைச்சி கறி, கோழியிறைச்சி கறி மற்றும் மீன்.. 


2018, யாழ்ப்பாணம்.

விடிய 6.00 மணி இருக்கும் எண்டு நினைக்கிறன், யாழ்ப்பாணம், நல்லூர் சொக்கர்(ன்) கடையில் காணும் முதல் முகம் மக்கள் திலகம் தான்.

நல்ல பால் தேத்தணி கிடைக்கும் இடம்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில்
Geoffrey Bawaவின் படைப்பு..
எந்த வருடம் எடுத்தது எண்டு நியாபகம் இல்லை.

இங்கே பலமுறை பதிவிட்ட படம் இதுவாக தான் இருக்கும், இருந்தாலும் இன்னொருக்கா,.. 
யாழ்ப்பாணத்து கறுத்த கொழும்பான் மாம்பழம்.🙂  
பிறகு நண்பர்கள் படை சூழ சாப்பிட போனால், பாலாண்டியும் பரோட்டாவும் 
Must have அல்லோ 🙂 
குருணாகல, 2014,

பொல் ரொட்டி.

சிங்கள தேசம். 

காலை உணவு (2017) 

ஈழத்தில் வழக்கமா எல்லா சைவ கடைகளிலும் கிடைக்கும் காலை உணவு...

இடியப்பம், சொதி(essential), சாம்பார், வடை, சம்பல்(essential).

(வடையை பிய்த்து இடியப்பத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும்)

வீட்டுக்கு கொண்டு வந்து சாப்பிட்டது, அதனால் பெரியாரும் இணைந்து கொண்டார்..🙂 

Comments

  1. எழுத்தும் தமிழும் ...🔥🔥!!!

    //நினைவுகளை போல் ஒழுக்கமற்ற
    தொகுப்பாய்,
    கனவுகளை போல் தொடக்குமும் முடிவுமற்ற காட்சிகளாய்,..

    Randomஆ
    இங்கும் அங்குமாக///

    ஈழத்து உணவுகள் ஊடான நினைவுகள் 😍✨

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற