Skip to main content

1915 சிங்கள முஸ்லிம் கலவரம் - சிங்கள உழைக்கும் வர்க்கம் பக்கம் நின்ற ராமநாதன்! வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்கள்.

1915 நடந்த முஸ்லிம் சிங்கள கலவரத்தின் பின்னர், அமுல்ப்படுத்தப்பட்ட martial lawஇன் அடிப்படையில் இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களிடம் இருந்து கலவரத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பீடு என்ற பெயரில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அன்று 50, 60 சதங்கள் கணக்கில் உழைத்து கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களிடமிருந்தெல்லாம் 6000, 7000 தண்டனை கட்டணமாக கோரப்பட்டது.

அந்த தொகையை கட்ட முடியாதவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் உடமைகள் பறிக்கப்பட்டது.


கண்டியில் நடந்த கலவரத்துக்கு எப்படி இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் பொறுப்பாவார்கள்? குறிப்பிட்ட கலவரத்தை தொடக்கி வைத்த வெளிநாட்டு முஸ்லிம் வார்த்தகர்களின் அரசியலையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

கண்டியில் உள்ள இலங்கையை சேர்ந்த சோனகர்களும், அவர்களின் பள்ளிவாசல் நிர்வாகமும் குறிப்பிட்ட பௌத்த பெரஹேராவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்த சோனகர்களும் எதிர்ப்பு தெரிவித்தது போல் தான் சித்தரிக்கப்பட்டது.

அன்று பொன்னம்பலம் ராமநாதன் Martial lawக்கு எதிராக வாதாடினார் என்று சொல்லும் போது, இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்கள் மீது  சுமத்தப்பட்ட குற்றத்துக்கு எதிராகவும் தான் வாதாடினார். அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாமல் வறுமையில் வாடிய சிங்கள கிராமங்களில் உள்ள மக்களின் மீதும் Martial law பாய்ந்தது. அவர்களுக்கும் கலவரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொன்னம்பலம் ராமநாதனின் நடவடிக்கையால் விடுதலையான 8000க்கு மேற்பட்ட சிங்களவர்களில் இப்படிப்பட்ட கூலித் தொழிலாளர்களும் அடங்குவார்கள்.

Martial lawஆல் ஒவ்வொரு ஊரிலும் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் விவரங்களை எல்லாம் சேகரித்து அவர்களுக்கான நீதியையும் பெற்று கொடுத்தார் ராமநாதன். அதனால் தான் சிங்களவர்கள் அவரை தலைக்கு மேல் தூக்கி கொண்டாடினார்கள்.

ராமநாதன் மற்றும் அன்று தலையிடாமல் Martial law தொடர்ந்து நீடித்திருந்தால், இலங்கை முழுவதும் உள்ள சிங்களவர்களின் கோபம், கண்டிக்கு வெளியே வாழும் அப்பாவி சோனகர்களுக்கு எதிராகவும் திரும்பியிருக்கும்.

ராமநாதன் ஒரு சிக்களுக்குரிய அரசியல்வாதி என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை, ஆனால் 1915இல் அவர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வாதாடினார் என்று பொது புத்தியில் ஏற்றப்பட்ட கதையானது ஆதாரமற்ற கட்டுக் கதை.

Martial law தண்டனை கட்டனத்தால் பாதிக்கப்பட்ட சில சிங்கள ஊர்களை பற்றிய விவரத்தை, பதிவோடு இணைக்கப்பட்டிருக்கும் ராமநாதன் உரையின் சில பக்கங்களில் காணலாம்.
-mrpaluvets, 08/02/26




Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...