Skip to main content

பிள்ளை கடத்தல்காரன் டக்ளஸ் கைது. தமிழர்கள் கொண்டாட்டம்!

டக்லஸ் தேவானந்தா எனும் கொடிய மிருகம் சமீபத்தில் இலங்கையில் கைது செய்யப்பட்ட செய்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு சிங்கள Drug Mafia Underworld Gangsterக்கு தன்னிடமிருந்த துப்பாக்கியை வழங்கிய குற்றத்துக்கு இந்த டக்லஸ் மிருகம் கைது செய்யப்பட்டிருக்கு. 
தமிழினத்தை சிங்களத்துக்கு காட்டி கொடுத்து, காவு கொடுத்த மிருகங்களில் முதன்மையானவன் இந்த டக்ளஸ். EPRLF பத்மநாபாவின் சீடனான இவன், 80களில்
EPRLFஇன் ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தான். EPRLFஇன் ராணுவ வீழ்ச்சிக்கு இவனும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தான் என்று சொல்லலாம். பின்னர் இந்திய அமைதி காக்கும் படை EPRLFஐயும் அதன் தலைமையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர், இவன் அந்த அமைப்பில் இருந்து விலகி, தனியாக ஒரு அமைப்பை EPDP என்று உருவாக்கி, சிங்கள அரசுடன் இணைகிறான். 

விடுதலை புலிகள் இயக்கம், மற்றும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட கூடிய அனைவரையும், சிங்களத்திடம் காட்டி கொடுத்து, கொன்று குவிக்கும் அடியாள் வேலையை இவன் யாழ்ப்பாணத்தில் இருந்து செய்து வந்தான். இவனோடு பயணிக்கும் ஆட்களுக்கு சிங்கள அரசின் தயவால், மாதாந்தம் சம்பளம் , சாராயம், குடும்பத்தினருக்கு அரச வேலைகள், பதவிகள் வழங்கப்பட்டது. 

இலங்கை வடக்கில் உள்ள தீவக பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு, தமிழர்களுக்கு எதிரான பல படுகொலைகளை, ஆட்கடத்தல், போதை பொருட்கடத்தல், போன்ற குற்ற செயல்களை செய்து வந்தான். தென்னிலங்கையில் என்ன ஆட்சி மாற்றம் நடந்தாலும், இவனுக்கு நிச்சயம் ஏதாவதொரு அமைச்சு பதவி வழங்கப்பட்டு வந்தது. இவன் செய்த கொடூர செயல்களிலே மிகவும் கொடூரமானது ஆதரவற்று இருந்த சிறுவர்களை கடத்தி அடிமைகளாக விற்றது தான். எண்ணற்ற தமிழ் சிறுவர்கள், குறிப்பாக ஆண்கள், இவனது கும்பலால் கடத்தப்பட்டு, வெளிநாட்டு மாபியாக்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். இந்த குற்றங்கள் குறித்தான ஆதாரங்களை வெளியே கொண்டு வந்த ஸ்டீபன் சுந்தரராஜ் எனும் World Vision குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரையும் இவனது கும்பல் படுகொலை செய்தது. 

இப்படி இந்த மிருகம் செய்த படுகொலைகள் குற்றங்கள் சிலவற்றின் பட்டியல்..

1989 (சென்னை, இந்தியா): ஒரு 10-வயது சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த குற்றத்துக்காக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டான். அதற்கு பிறகு சூளைமேடு துப்பாக்கி சூடு சம்பவத்திலும் இவன் மீது வழக்கிருக்கு. 

1 ஜனவரி 1993 (கொழும்பு): தர்மலிங்கம் செல்வகுமார் என்ற முன்னாள் ஈ பி டி பி உறுப்பினர் ஒருவர் டக்ளசுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ததற்காக கடத்தப்பட்டு, சித்தரவதைக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டான். 

90களில் ஈபிடிபி சிங்கள ராணுவத்தோடு சேர்ந்து தமிழர்களுக்கு எதிரான ஆயிரக்கணக்கான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது. 

2 நவம்பர் 1999 (கொழும்பு): தமிழ் வார பத்திரிகை தினமுரசு இலக்கிய மற்றும் தலைமை ஆசிரியரான அற்புதராஜா நடராஜாவை அவரது டிரைவர் உடன் சுட்டுத் தள்ளினார்கள் இந்த ஈபிடிபியினர். 

19 அக்டோபர் 2000 (யாழ்ப்பாணம்): மைல்வாகணம் நிமல்ராஜன் – யாழில் உள்ள Uthayan, BBC தமிழ் & சிங்கள சேவைகள், விரகேசரி, போன்ற ஊடகங்களுக்கு எழுதும் பத்திரிகையாளர் ஈபிடிபியால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

2 மே 2006 (யாழ்ப்பாணம்): சுரேஷ் குமார், ரஞ்ஜித் குமார் – Uthayan பத்திரிகை ஊழியர்கள் ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 

13 மே 2008 (யாழ்ப்பாணம்): மகேஸ்வரி வேலாயுதம் – மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் சமூக நலத் துறை ஆலோசகர்,ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்.

2009: ஸ்டீபன் சுந்தர்ராஜ் – World Vision குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், ஈபிடிபியினரால் படுகொலை செய்யப்பட்டார்

2012 (நெடுந்தீவு): 12-வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு ஈபிடிபி காடையரால் படுகொலை செய்யப்பட்டாள்  

இப்படி ஆயிரக்கணக்கான குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த இந்த மிருகம் ஒரு சாதாரண வழக்கில் கைது செய்யப்பட்டாலும், அவன் கைது செய்யப்பட்ட செய்து தமிழர்கள் மத்தியில் கொண்டாட்டத்துக்குரிய செய்தியாகவே பார்க்கப்படுகிறது. 

-mrpaluvets
08/01/26

Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

Chola's 'Look and Act east' policy

The Look and Act east policy of the Cholas  Most of today’s political conflicts are a rerun of the past events in history. Geography and history are the main determinants of the future. These days not a single day passes by without a human or political story comparing China and India. The geopolitical rivalry between these two nations to exert power across the Indian Ocean and the South China Sea has always been a sensational topic for the media. It is this geopolitics that now defines politics of our region and a lot of these geopolitical hotspots are now deciding the political fate of countries around India. Strait of Malacca is one such geopolitical hotspot that has been of interest for both India and China.  Both India and China have a history with Strait of Malacca. Interestingly, India’s history with it goes back to our very own Cholas.  The Strait of Malacca is one of the most important shipping lanes in the world. This is an important spot between the Pacific and ...

சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்?

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் திமுகவினர் ஆமை கறி, ஹோட்டல் billனு புலம்பிக்கொண்டிருக்க போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. சீமானை கண்டு திமுக பதறுவது ஏன்? திமுகவினரின் பிரச்சனை, சீமானின் உணவோ, அவர் தங்கும் இடமோ, அவர் செல்லும் வாகனமோ அல்ல. திமுகவினரின் பிரச்சனை சீமான் எனும் தனி நபர் இன்று ஒரு மாற்று தலைமையாக உயர்ந்து நிற்பது தான். அண்ணன் சீமான், ஆமை கறி பற்றி ஒரு முறை பேசினார், அதற்கு பிறகு அவர் அதை பற்றி பேச வேண்டிய தேவை எழவில்லை. ஆனால் ஆயிரம் முறை, பல நூறு மேடைகளில் அண்ணன் சீமான் மாட்டிறைச்சி கறி பற்றி பேசியிருக்கிறார், ஆமை கறி பற்றி சீமான் பேசிய ஒரு காணொளிக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் மாட்டிறைச்சி பற்றிய அண்ணன் சீமானின் கருத்துக்களுக்கு வழங்கப்படவில்லை? இங்கே ஆரியத்துக்கும் தமிழினத்துக்கும் இடையே நடப்பது ஒரு பண்பாட்டு போர். பண்பாட்டின் முக்கிய அடையாளமாக இருப்பது உணவு தான். அந்த உணவின் மீது,  ஒடுக்கப்பட்ட மக்களின் உணவு பண்பாடு மீது,  ஆரியம் தொடுத்த பெரும் போரை பற்றி அதிகம் பேசுவது அண்ணன் சீமான் தான். மாட்டிறைச்சி உண்போரை அடித்து கொல்லும் காவி...