Skip to main content

தேவை ஒரு Task Force

கொழும்பில் நடக்கும் கூத்து ஒரு புறம் இருக்கட்டும். இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்த மீள தேவைப்படும் எந்த ஒரு செயல் திட்டத்தையும் கொழும்பில் இருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு செய்ய முடியாது. எல்லாம் மக்களிடம் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். தமிழ் தேசம் குறிப்பாக வேற ஒரு செயல் திட்டத்தில் ஈடுபட வேண்டும்.

தென்னிலங்கையில் இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள், வட கிழக்குக்கு முதலில் திரும்ப வேண்டும். உங்களுக்கு கொழும்பில் எந்த வேலையும் இப்போதைக்கு கிடையாது.

தாயகம் திரும்பியவுடன் கூட்டமைப்பு, முன்னணி என்ற இரண்டு முதன்மை கட்டமைப்புகளின் தலைமைகளும் இணைந்து ஒரு சந்திப்பை நடத்த வேண்டும்.

அந்த சந்திப்பில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து தமிழர் தேசத்தை மீட்க ஒரு தனி bi partisan task force ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த task force எந்த கட்சி பிரச்சரங்களிலும் ஈடுபடாது, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன், தாயகத்தில் உள்ள ஒவ்வொரு ஊரில் இருந்தும் நெருக்கடி பாதிப்பு குறித்தான தகவல்களை சேகரிக்கும் பணியை ஆரம்பிக்க வேண்டும்.

இந்த பணியில் இரு கட்சி தொண்டர்களும் தலைமைகளும்
இணைந்து செயல்பட வேண்டும். இதில் ஒரு பக்கம் தரவு சேகரிப்பு நடக்கும் போது, மற்ற பக்கம் இரு கட்சி தலைமைகளும், முதன்மை முகங்களும், ஒன்றாக ஊர் ஊராக சென்று மக்களை சந்தித்து பேச வேண்டும். கூட்டங்கள் நடத்தி நம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

சேகரிக்கப்படும் தகவல்கள் வழி, உடனடி தேவைகளை மதிப்பீடு செய்து, அவற்றை எவ்வாறு மக்களுக்கு வழங்கலாம் என்ற logistics பற்றி திட்டங்களை அந்த task force வகுக்க வேண்டும்.

முக்கிய இரு கட்சி அரசியல் பிரமுகர்கள் இணைந்து அவற்றை நடத்தி முடிக்க தேவையான பணத்தை திரட்ட ஒரு NGO வை உருவாக்க வேண்டும். அதன் நடவடிக்கை fully transparent ஆ இருக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட NGOவுக்கு புலம்பெயர் தமிழர்கள் ஊடாக பணத்தை அனுப்பி வைக்க வழி அமைத்து கொடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட ஊர்கள், மக்களுக்கு உடனடியாக உதவிகள் போய் சேரும் விதம் ஒழுங்கமைப்புகள் எல்லாம் இருக்க வேண்டும். இந்த நடவடிக்கை ஊடாக, நமது தேசத்தை ஒருங்கிணைத்து,

ஒரு collective ஆ எங்கள் strength அ நாங்கள் காட்ட வேண்டிய தேவை இருக்கிறது.

இதன் ஊடாக தென்னிலங்கைக்கு நம் மக்கள் ஒரு பாடத்தை படிப்பிக்கலாம்.

வட கிழக்கில் எம்மவர்கள் தெருவில் நிற்க வேண்டிய தேவை இல்லாத ஒரு நிலையை உருவாக்கி காட்டுவது தான் அந்த task force இன் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நம்மை நிர்வாகிக்க நாமே போதும் என்று காட்ட வேண்டும்.

சிவில் சமூகத்தின் இயக்க வெளியை அதிகார வெளி மட்டுமே தீர்மாணிக்காது என்பதை உணர்த்த இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

-Mr. பழுவேட்டரையர்
12/07/2022

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக