Skip to main content

இந்தியாவின் துரோகம்..

அண்ணன் திலீபன் இந்தியாவிடம் முன்வைத்த 5 கோரிக்கைகளில், தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வந்த

• ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
என்பதும் ஒன்று.

புலிகள் இந்தியாவிடம் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு அகிம்சை வழிக்கு திரும்பிய பின்பு, சிங்கள ராணுவ ஊர்காவல் படைகள் மற்றும் ஒட்டுக்குழுக்கள் ஊடாக புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை சிங்களமும் இந்தியாவும் இங்கும் அங்குமாக அரங்கேற்றி கொண்டிருந்தது.

இந்தியாவின் வாக்குறுதியை நம்பி ஆயுதங்களை ஒப்படைத்து  நிராயுதபாணிகளாக நின்ற புலிகளை இந்த ஊர்காவல் படைகளும், ஒட்டுக்குழுக்களும் வேட்டையாட தொடங்கியது.

இதையெல்லாம் எதிர்த்து தான் திலீபன் அகிம்சை வழியில் போராடினார். 'இந்திய அமைதி காக்கும் படை' புலிகளிடம் இருந்து ஆயுதங்களை பெற்றுக்கொண்டதை போல், மற்ற குழுக்களிடம் இருந்தும் ஆயுதங்களை பறித்திருக்க வேண்டும் தானே?

அது தானே முறையான ஒரு "அமைதி காக்கும்" நடவடிக்கையாக இருந்திருக்கும்? அதை தானே திலீபனும் புலிகளும் விரும்பினார்கள்? அப்ப அதை செய்ய ராஜீவ் தயங்கியது ஏன்? இங்கே இந்தியாவின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதா?  இல்லை, புலிகளை அழிப்பதா?

புலிகளுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறித்த ராஜீவ் படை, அந்த ஆயுதங்களை தங்களின் ஒட்டுக்குழுக்களுக்கு வழங்கி புலிகளை வேட்டையாட சொல்லி உத்தரவிட்டது.

இந்தியா துரோகம் செய்தது, புலிகளை முதுகில் குத்தியது. ஆனால் அதற்கும் புலிகளின் உடனடி மறுபதில் அகிம்சை வழி போராட்டமாக தான் இருந்தது. அங்கேயும் இந்தியாவை புலிகள் எதிர்க்க விரும்பவில்லை, ஆனால் இந்தியா திலீபனின் அகிம்சையை தோற்கடித்தது.

"திலீபன் என்ன பெரிய காந்தியா"? என்று சொல்லி அவரது போராட்டத்தை கொச்சைப்படுத்தியது ராஜீவின் வானரம் டிக்சிட்.

தமிழர் தேசத்தில் புலிகளுக்கு இருந்த monopoly on violence, (வன்முறையின் முற்றுரிமை)யை உடைக்கவே இந்தியா புலிகளை நம்ப வைத்து கழுத்தறுக்க துணிந்தது.

புலிகளின் தலைமையின் கீழ் ஈழ விடுதலைக்கான ஒட்டு மொத்த ராணுவமும் அணிவகுத்து நின்றால், சிங்கள State இயங்க தேவையான monopoly on violence தொடர்ந்து சவால்களை சந்தித்து கொண்டே இருக்கும் என்று அஞ்சி, ஈழ விடுதலை போராட்டத்தை நசுக்கும் நோக்குடன் புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை ஒட்டுக்குழுக்கள் ஊடாக இந்தியம் அரங்கேற்றியது.

திலீபன் இந்தியத்திடம் இல்லாத மனிதம், இருப்பதாக நம்பி பசியுடன் போராடினான். இந்தியா அவன் உயிரை பறித்து, தனது மனிதமற்றத்தன்மையை மீண்டும் நிரூபித்தது.

இந்திய அமைதி காக்கும் படையின் உண்மையான நோக்கம் அமைதி காப்பதாக இருந்திருந்தால், திலீபன் மரணத்தை தழுவியிருக்க மாட்டார். 
-Mr. பழுவேட்டரையர்

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக