Skip to main content

சிங்கள பேரினவாதத்தின் கருவியான முஸ்லிம் தலைமைகள்

ஈழத்தில் தமிழ்- முஸ்லிம் உறவு பற்றி பேசும் போது,

முஸ்லிம் தலைமைகள் தொடர்ந்து சிங்கள பேரினவாதத்தின் கருவியாக செயல்பட்டு வந்ததை பற்றியும் பேச தான் வேண்டும்.

தமிழர்களுக்கு எதிரான தனது அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையின் முஸ்லிம் தலைமைகளின் முழு ஆதரவுடன் தான் சிங்களம் அரங்கேற்றி வந்திருக்கு.

தமிழகத்தில் ஐயா காயிதே மில்லத் தமிழ் மொழி உரிமைக்காக போராடிய போது, இலங்கையில், 'சிங்கள மட்டும் மொழி சட்டத்தை' மக்கள் ஏற்க வேண்டும் என்று சொல்லி, இலங்கை முழுவதும் பிரச்சாரம் செய்தார், Sir ராசீக் பாரீத் எனும் முஸ்லிம் தலைவர்.
தனி சிங்கள சட்டத்துக்கு ஆதரவாக களமாடிய முக்கிய தலைவர்களில் இவரும் ஒருவர்.
சிங்கள மொழிக்கும், அதன் திணிப்புக்கும் ஆதரவாக மட்டும் அல்ல, தனி சிங்கள கொடிக்கு ஆதரவாகவும் முஸ்லிம் தலைமைகள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

16 January 1948 அன்று, இலங்கையின் தேசிய கொடியாக, சிங்கள இனத்தின் தனி சிங்கள சிங்க கொடியை பாராளுமன்றத்தில் முன்னிறுத்தி முதலில் motionஅ table பண்ணது மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அகமது சின்னலெப்பே தான். 

அதை தவிர மலையக தமிழர்களின் குடியுரிமை மறுப்பு சட்டத்துக்கு ஆதரவாக
Dr.MCM Kaleel மற்றும் Tuan Burhanuddin Jayah போன்ற முஸ்லிம் தலைவர்கள் வாக்களித்த வரலாறும் உண்டு


அந்த கால கட்டத்தில் மலையக தமிழர்கள் பக்கம் நிற்க தவறிய தமிழ் அரசியல் தலைவர் பொன்னம்பலத்தை கண்டித்து, அவரிடம் இருந்து பிரிந்து சென்று தான் தந்தை செல்வா இலங்கை தமிழரசு கட்சியை தொடங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் முஸ்லிம் தலைமைகள் மத்தியில் எந்த குழப்பமும் இருக்கவில்லை. மலையக தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைமைகளும் சிங்கள தலைமைகள் போல் தெளிவாகவே இருந்தார்கள்.
அதற்கு பிறகு,

1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இன கலவரத்தின் போது அன்றைய முஸ்லிம் தலைமைகள் சிங்களத்தின் பக்கம் தான் நின்றார்கள். அன்றைய All Ceylon Muslim League தலைவர் Dr. கலீல், "தமிழர்கள் தனி நாடு கோரினால் கலவரங்கள் நடக்க தான் செய்யும்" என்று பேசியிருந்தார்.

இந்தியாவில் அன்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி, இந்திய பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்த இந்திய முஸ்லிம் லீகையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.

காத்தான்குடி படுகொலைக்கு முன்பு, பின்பு என்று ஈழத்தின் தமிழ்-மஸ்லிம் உறவை பிரித்தால், மேலே குறிப்பிட்ட அனைத்து சம்பவங்களுக்கு காத்தான்குடி முன் நடந்த வரலாறு என்றே வகைப்படுத்தலாம். 

-Mr. பழுவேட்டரையர்
25/08/2020

Comments

Popular posts from this blog

LEO கர்ஜிக்கிறது -தரமான சம்பவம்

Leo இப்ப தான் பார்த்துட்டு வெளிய வாறேன். லோகேஷின் உலகத்தில் முழுமையடைந்த ஒரு கதாபாத்திரமாக Leo கதாபாத்திரம் செதுக்கப்பட்டிருக்கு. ஒரு நீண்ட கதையின் மூன்றாவது அதிரடி அத்தியாயமாக படம் இருக்கு. LEO எனும் கதாபாத்திரத்துக்கு லோகேஷின் உலகத்துக்குள் ஒரு முழுமையான entry. Climaxஇலும் ஒரு ராஜமரியாதையுடனான வரவேற்பு.(படத்த பாருங்க புரியும்) A well written character. Undoubtedly Lokesh's thoroughly fleshed out character in the universe. பழைய திருமலை விஜய் சில காட்சிகளில் அட்டகாசமாக வந்து போகிறார். திரிஷா உடனான ஒரு காட்சியில் விஜய் ஒரு தேர்ந்த நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார். It was truly a beautiful scene. Hyena sequenceஅ விட Cafe sequence எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிச்சிருந்தது. அதுக்காகவே மறுபடியும் போய் பார்க்கலாம் போல இருக்கு. சண்டை காட்சிகள் சொல்லவே வேண்டாம். Overallஆ படம் தரம். 🔥 நிறைய சொன்னா it will be a spoiler. So ill leave it here. -Mr. பழுவேட்டரையர் 19/10/23

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

இட்லர் படையை வீழ்த்திய பெண்மை

'ஆண்மை, பெண்மை' பாலின குணாதிசயங்கள்(gender constructs) அல்ல!, அவை சமூக எதிர்ப்பார்ப்புகளின்(social expectations) அடிப்படையிலான சமூக கட்டமைப்புகள்(social construct). 'பெண்மை, ஆண்மை' எனும் கருத்தியல் ஊடாகவே ஒரு சமூகம் "பாலின கடமைகளை"/ gender rolesஐ வகுக்குது. அதன் ஊடாகவே பெண்கள் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்., ஆணாதிக்கம், அதிகாரத்தை ஆண்மையின் பண்பாக மாற்றுகிறது, பிறகு பெண்மை எனும் கருத்தியல் ஊடாக பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள், பிறகு மத, கலாச்சார சடங்குகள் ஊடாக பெண் அடிமைத்தனம் நியாய்ப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச படை, Battle of Stalingradஇல் போரிடும் போது, ஸ்டாலினின் சிவப்பு ராணுவத்தில் போரிட்டு கொண்டிருந்த பெண்களை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இட்லர் படையின் ஆரிய மேலாதிக்க சிந்தனையை, ஆண்மை on steroids என்று கூட சொல்லலாம், அவர்களுக்கு பெண்களை போர்க்களத்தில் போராளிகளாய் கண்டது பேரதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் மனதில் இருந்த பெண்மை, ஆண்மை எனும் கோட்பாடுகளை தகர்த்தெறியும் கருவியாக அந்த பெண் போராளிகளின் கையில் இருந்த ஆயுதங்கள்(அதிகாரம்) அவர்களுக