Skip to main content

ஆண்மை என்றால்

ஆண்மை, பெண்மை

ஆண்மை, பெண்மை என்பது உயிரியல், அல்லது உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட கோட்பாடுகள் அல்ல. அவை ஒரு சமூக கலாச்சார கட்டமைப்பு. இந்த கட்டமைப்பு காலத்திற்கு காலம் மாறும். ஆண்மையும், பெண்மையும், ஆண், பெண் பாலினங்கள் பற்றிய ஒரு சமூகத்தின் எதிர்பார்ப்புகளின்(social expectations)
கட்டமைப்பு.

It defines the social expectations of the various genders.இந்த எதிர்பார்ப்புகள் நடை, ஆடை, நடத்தை, தொழில், பேச்சு, கட்டுப்பாடு என்று ஒரு பாலினத்தின் இயக்கத்தையே நிர்ணயிக்கிறது. They then construct the gender roles in the society.

அன்பு, பரிவு, அடக்கம், நாணம், இப்படி பல விதமான "குணங்களின் ஐக்கியம்" 'பெண்மை'யாகவும். வீரம், துணிச்சல், ஆளுமை, அதிகாரம் போன்ற பண்புகள் ஆண்மையாகவும் கட்டமைக்கப்படுகிறது.

பொது பண்புகளை, ஆண்மை பெண்மை என்று வகைப்படுத்தி, அந்த பண்புகளுக்கேற்ப பெண் என்பவள் இந்த தொழில் தான் செய்ய வேண்டும், இந்த படிப்பை தான் படிக்க வேண்டும், என்று சமூகம் நிர்ணயிக்கிறது. மனிதர்களின் பொது பண்புகளை, பாலின பண்பாக மாற்றும் கருத்தியல் தான் 'ஆண்மை பெண்மை.

பெண்கள் அதிகாரத்தில் பங்கு கோரவோ, தாம் விரும்பிய கல்வியை, வேலையை, வாழ்க்கையை தேர்ந்தெடுக்கவோ, முதல் முட்டுக்கட்டையாக இருப்பது இந்த ஆண்மை,பெண்மை எனும் சமூக எதிர்பார்ப்புகள் வழி உருவாக்கப்பட்ட சமூக கட்டமைப்புகள் தான்.

ஆண்மையை விந்துக்கள் தொடர்பான ஒரு கருத்தாக, உடல், ஆணுறுப்பு சம்பந்தப்பட்ட ஒரு sex drive, sexual activityஉடன் தொடர்பு படுத்தி பார்ப்பது மடத்தனமம். இது ஒரு சமூகவியல் subject.

'பெண்மையின்'அடிப்படையாக 'கற்பு'  எனும் கருத்தியல் முன்நிறுத்துப்படுகிறது. P.T.S ஐயங்கார் போன்றவர்கள் "கற்பின் நிறுவணமயமாக்கள் தான் ஆணாதிக்க சூழலை உருவாக்கியது" என்று வாதிட்ட போது,ஈழத்து பேராசிரியர் க.சிவத்தம்பி "இல்லை, ஆணாதிக்கத்தின் தயாரிப்பு தான் கற்பு என்று வாதிட்டிருக்கிறார்"

Dr.Sivathamby disagrees with the formulation made by P.T.S Iyengar that the institution of Karpu, form of marriage & the development of private property led to the patriarchal form of society....& says that the REVERSE process that patriarchal form of society led to the institution of Karpu is correct." (இப்ப புரியதா ஏன் இந்த ஜெயமோகன் மாதிரி ஆளுங்களுக்கு மார்க்சிய ஈழத்து அறிஞர்களின் விமர்சனங்கள் பிடிப்பதில்லை என்று 😉.. I'll not deviate, will discuss this later)

Cultural notions of “feminine” and “masculine” behavior are shaped in part by observations about what women and men do. This kind of “gender marking” tends to discourage women or men from entering “gender-inauthentic” occupations (Faulkner, 2009).

ஆண்மையின் கட்டுமானம் என்பது அதிகாரத்தின் முற்றுரிமையாக கட்டமைக்கப்பட்டது, ஆண்மையின் அதிகார இருப்பை பாதுகாக்க உருவாக்கப்பட்ட புனிதம் தான் பெண்மை. ஈழத்து தேசவழமை சட்டங்களில் பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது. வரதட்சணை வழியாக கிடைக்கும் so called சொத்துக்களை ஒரு பெண் விற்க ஆணின்(கணவனின்) சம்மதம் வேண்டும் என்று அந்த சட்டம் சொல்கிறது. இதை புலிகள் ஒழித்தார்கள்.

புலிகள் இயக்கத்தில் ஆண்மையின் பொருள் மாற்றப்பட்டது. தேசியத் தலைவர் முன்வைக்கும் பெண்ணியம் கூட ஆண்மை பற்றிய உரையாடலாக தான் இருக்கிறது.தலைவரின் பார்வையில் ஆண்மை கற்பிக்கும் பெண்மை எனும் புனித பிம்பங்கள் தான், பெண் விடுதலையின் அடிப்படை பிரச்சனையாக இருக்கிறது.

Sexuality, masculinity, feminity எல்லாம் ஒன்றல்ல. பெண் பற்றிய உனது sexual கற்பனைகள் அல்ல பெண்மை. நான் உடலுறவு கொள்ள விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்று நான் தீர்மானிப்பது sexuality தொடர்பானது.

பெண்மை என்பது sexuality தொடர்பான ஒரு கருத்தியல் அல்ல, அது ஒரு "சமூகத்தின்" பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு ஆண் சமூகத்தின் ஒட்டுமொத்த பார்வை!

நீ உடலுறவு கொள்ள விரும்பும் பெண்களை நீ இந்த சமூகம் வரையறை செய்திருக்கும் 'பெண்மை' எனும் கோட்பாட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதில்லை. We men have a free hand with our sexuality and sexual preference noh?

ஆனால் நீ திருமணம் செய்யும் பெண்ணிடம் 'பெண்மையின்' கோட்பாடுகளை எதிர்பார்க்கிறாய், ஏனென்றால் திருமணம் ஒரு சமூக நிறுவனம். அங்க உனது முடிவை தீர்மானிப்பது sexuality அல்ல! இந்த சமூகம், ஆண்மை!. உனது மேலாதிக்கத்தை நிறுவ பெண்மை தேவைப்படுகிறது.

ஆண்மை என்றால் என்னவென்று ஆண்கள் தீர்மானிக்கிறார்கள்
அதன் அடிப்படையில்,  அதற்கு அடிபணியும் விதமாக பெண்மை என்றால் என்னவென்று ஆண்களே தீர்மானிக்கிறார்கள். 

பெண்மை என்றால் என்னவென்று எந்த ஒரு பெண்ணும் தீர்மானிப்பதில்லை. ஆண் சமூகமே அதை தீர்மானிக்கிறது.

ஆகையினால், பெண்மை என்றால் என்னவென்று தீர்மானிக்கும் ஆதிக்க ஆண்மை அழியவேண்டும்! நீ உடலறவு கொள்ள விரும்பும், காதலிக்க விரும்பும் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது உங்கள் இருவருடைய தனிப்பட்ட முடிவு, அதில் ஆண்மை பெண்மை எனும் சமூக கோட்பாடுகள் தேவைப்படாது.

பெண்மை எனும் புனிதம் அழிய வேண்டும் என்றால், அதன் வேர் ஆக இருக்கும் ஆண்மையெனும் ஆதிக்கமும் அழிய வேண்டும். 
அதுவே சமத்துவம்.

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர் 
9/3/2019


Comments

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வது போல எங்கள் உறைப்பு

நீங்கள் கேட்ட புத்தக பரிந்துரைகள்

பல தோழர்கள் என்னிடம் அடிக்கடி புத்தகங்களை பரிந்துரைக்க சொல்லி கேட்கிறார்கள். அவற்றை பரிந்துரைக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் இதுவரை படித்த புத்தகங்களின் பட்டியலை இயன்றளவு இங்கே பதிவிடுகிறேன். இது பகுதி 1. ▪️பொன்னியின் செல்வன்-கல்கி ▪️வேங்கையின் மைந்தன்-அகிலன் ▪️கடல் புறா-சாண்டிலியன் ▪️சோழர்கள் -நீலகண்ட சாஸ்திரி (All parts) ▪️சோழர் காலச் செப்பேடுகள்- மு ராஜேந்திரன் ▪️பண்பாட்டு அசைவுகள்- தொ.ப ▪️உரைகல்-தொ. ப ▪️மானுட வாசிப்பு -தொ.ப ▪️செவ்வி-தொ.ப நேர்காணல்கள் ▪️இந்து தேசியம்- தொ.ப ▪️ திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி ▪️விடுதலை - அன்ரன் பாலசிங்கம் ▪️ ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை -நாவலர் ஏ இளஞ்செழியன் ▪️The Fall and Rise of the Tamil Nation- V.Navaratnam ▪️Learning Politics from Sivaram -Mark.P.Whitaker ▪️தராகி சிவராமின் கட்டுரைகள் ▪️Empires of Trust -Thomas F.Madden ▪️The Revenge of Geography -Robert D Kaplan. ▪️The Monsoon: The Indian Ocean and the Future of American Power- Robert D Kaplan.

சீமான் சூழ் திராவிடம்!

தேர்தல் முடியும் வரை பாஜக உள்ள வந்துடும் வந்துடும்னு பூச்சாண்டி காட்டி கொண்டிருந்த திமுகவினர் இப்ப முழு நேரமும் சீமானை எதிர்ப்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். ஒரு சிலர் பாஜகவின் தயவுடன் சீமானை எந்த சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார்கள். இது புதிதல்ல,  திமுக அதிமுக ஆட்சிகளால், எந்த காலத்திலும் டெல்லியின் ஆதிக்க சக்திகள் ஒடுக்கப்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக தமிழகத்தில் வளரும் கட்சிகள், அல்லது திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வரும் கட்சிகள் மட்டுமே திட்டமிட்டு ஒடுக்கப்படும், ஒடுக்கப்பட்டு! ஒடுக்குப்பட்டு! தன்மானம் இழந்து, தனித்து நிற்கும் பலம் இழந்து, வலிமையற்ற நிலைக்கு அந்த கட்சிகளை தள்ளி விட்டு, பிறகு திமுகவும், அதிமுகவும் கூட்டணி என்ற பெயரில் அவற்றை கூறு போட்டு விழுங்கி விடும். இது தான் கால காலமாக அரங்கேறி வருகிறது. இந்த வழக்கத்தை தகர்த்து வருவது, இதற்கு விதிவிலக்காக இருப்பது நாம் தமிழர் மட்டும் தான். அதனால் தான் நாம் தமிழரை ஒடுக்க இயன்றளவு அனைத்து வழிகளையும் திமுக பயன்படுத்த தயாராகி கொண்டிருக்கிறது. அடுத்த 5 வருடங்களில் உதயநிதியை அரியணை ஏற்ற