Skip to main content

ஆண்களுக்கான பெண்ணியம்

பெண்ணியம், ஆண்களுக்கிடையிலான உரையாடலாகவும் கிளைவிட வேண்டும்.ஆண்மையை ஒழிக்க ஆண்கள் நாம் தான் முன்வர வேண்டும். தேசியத் தலைவர் சொன்னது போல் எங்கள் ஆழ்மனதில் இருந்து தான் மாற்றம் ஆரம்பிக்க வேண்டும்.

ஆண்மை எனும் கருத்தியல் ஆண்களாகிய எங்கள் மேலாதிக்கத்தை நியாயப்படுத்த உருவாக்கப்பட்டது. நாம் பேசும் பெண்ணியத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைப்பாடு, அது பெண்மை சார்ந்ததாகவே இருப்பது தான்.

பெண்ணியம் என்பது வெறுமனே பெண்களுக்கான விடுதலை மட்டுமல்ல, அது ஆண்மையெனும் ஆதிக்கத்தில் இருந்து விடுபட துடிக்கும் ஆண்களுக்குமான விடுதலை தான்..இதற்கான வேலையை ஆண்களும் செய்தாக வேண்டும். ஆண்கள் பேசும் பெண்ணியம் ஆண்மையை கேள்வி கேட்க வேண்டும்.!
ஊர் எங்கும் பெண்ணியம் பேசும் ஆண்கள் அனைவரையும் அழைத்து, அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுத்தால், அப்போதும் பெண்களுக்கு அதிகாரத்தில் சம பங்கு கிடைக்க வாய்ப்பில்லை.

ஆண்கள் பேசும் பெண்ணியம், ஆண்கள் இதுவரை அனுபவித்து வந்து ஆனெனும் சலுகைகள், ஆதிக்கத்துக்கு விரோதமானது! It is against the collective interest of men. ஆகையினால் நாங்கள் எங்களுக்கு,எங்கள் interestsக்கு எதிராக செயல்பட வேண்டும்! எங்கள் சலுகைகளை, ஆதிக்கத்தை, மீளாய்வுக்குட்படுத்த வேண்டும்.

ஓடுக்குமுறையை ஏவுபவன், எப்படி ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு பக்க பலமாக நிற்கலாம்? அவர்களிடம் சென்று அவர்கள் முழக்கத்தையே, அவர்களுடன் இருந்து எழுப்புவதனால் என்ன பயன்? ஆண்கள் மத்தியில் நாம் எத்தகைய மாற்றத்தை உருவாக்கிவிட்டோம்? எதை சாதித்துவிட்டோம்?

How are we men going to get rid of or question the hegemonic masculinity that serves the collective interest of us as males? How are we going to work against our own collective interests?

பெண் விடுதலை எல்லாம் சரி, எதிலிருந்து பெண்கள் விடுபட துடிக்கிறார்கள்? அவள் விடுதலைக்கு விரோதமாக இருக்கும் நிறுவனங்கள், சாஸ்திரங்கள், கட்டமைப்புகள் அனைத்துமே ஆண்களாகிய எமது அதிகாரத்தை நிறுவவே அவளை அடிமைப்படுத்தியிருக்கிறது! அவளின் சமத்துவத்துக்கு இடையூறாக இருப்பது நமது சலுகைகள் தான்.

How well do we understand our privilege as men?

ஆண்மைக்கும் அதிகாரத்துக்கும் ஒரே பண்புகள் தான் இருக்கிறது! ஆண்மை அதிகாரத்தின் மொழி! அதற்கு அடக்க மட்டும் தான் தெரியும்! அதற்கு சமத்துவத்தை எப்படி புரிய வைப்பது? அதனால் தான் அதிகாரம் பெண்களின் சிந்தனையில் இருந்து உடல் வரை அனைத்திலும் தலையிடுகிறது.

"பொம்பளைப் பிள்ளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்"னு அடக்கமுறையையும், ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்தி, பெண்களுக்கு அதை சிறு வயதிலிருந்தே பழக்கப்படுத்தும் இந்த ஆணாதிக்க சமூகம் எப்படி அவளிடம் நீ அடங்காதே, ஒடுங்காதே என்று சொல்லும்? ஆண்மையெனும் அதிகாரத்தின் மொழியை எப்படி மாற்றுவது?

ஆண்மை அதிகாரத்தின் மொழியென்று நாம் சொல்லும் போது, அந்த அதிகாரத்தை கைப்பற்றிய திராவிடமும், கைப்பற்ற துடிக்கும் தமிழ் தேசியமும் அந்த மொழியை பேசலாமா? பேசுகிறதே! என்ன செய்ய?

நாம் அதிகாரத்தின் பண்புகள் என்று வரையறை செய்த அனைத்து பண்புகளும் ஆண்மையின் பண்புகள் தான். முறுக்கு மீசைகளும், ஆண்ட பரம்பரை கதைகளும், வீர வரலாறும், எல்லாமே ஆண்களின் masculinityக்கான validationஆகவே கட்டமைக்கப்பட்டிருக்கு. ஆண்மையும் அதிகாரமும் ஒருசேர வளர்கிறது!

விடுதலை புலிகளின் வீரத்தை முறுக்கிய மீசைகளை விட, கட்டிய கொண்டைகளே அதிகம் பேசியது. அந்த இயக்கத்தில் அதிகார மொழியாக 'ஆண்மை' இல்லை!
ஆனால் நம் சமூகத்தில் ஆண்கள் கட்டமைத்த பெண்மையெனும் கருத்தியலில் பெண் என்பவள் அதிகாரம் மறுக்கப்பட்டவர்களிள் பிரதிநிதியாகவே இருக்கிறாள்! 

ஆண்மை தொடர்ந்து அதிகாரத்தின் மொழியாக இருக்க காரணம் என்ன? கோவில், ஆகமம்,சடங்கு, ஆன்மிகம், ஊடகம்,விளம்பரங்கள்,கலை, இலக்கியம், பாடல்கள்,கவிதைகள் என்று சமூகத்தின் சிந்தனையை செதுக்கும் அனைத்திலும் ஆண்மை தொடர்ந்து அங்கீரகரிக்கப்பட்டு வருகிறது.

ரொம்ப எல்லாம் போக வேண்டாம், ஒரு தமிழ் news channelஅ பாருங்க, அதில் செய்தி வாசிக்க பெண் ஒருத்தி இருப்பாள், ஆனால் கருத்து சொல்லும் ஆர்வலர்கள்,expert panel எல்லாத்திலும் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்?

திரைப்படங்களில், பாடல்களில் சொல்ல வேண்டுமா? ஏன் விளையாட்டு போட்டிகளில், cricket, football?..

இவற்றை எல்லாம் மாற்ற பெண்களை விட ஆண்கள் நம் பங்களிப்பு தான் அதிகம் தேவைப்படுகிறது. பெண்ணியம் பேசணும்! ஆனால் நாம் பேசும் பெண்ணியம், பெண்ணுக்கான உபதேசமாகவோ, முழக்கமாகவோ இருப்பதை விட ,அது ஆண்மை எனும் collectiveஇல் இருந்து நாம் எப்படி விடுபட வேண்டும் என்பதற்கான உரையாடலாக இருக்க வேண்டும்.

தமிழுடன்,
Mr. பழுவேட்டரையர்
25/9/2018




Comments

  1. சார், என்ன please unblock pannunga Twitter il ...

    My I'd: @qN3Dr7YamLL8DAH

    Please, I don't know why you blocked me

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சீமானும், ஈழத்து விருந்தோம்பலும்(ஆதாரங்களுடன்)

ஈழத்து விருந்தோம்பல் பற்றி தெரியாதவர்களுக்கு தான் சீமானின் பேச்சு வியப்பாக இருக்கும். சீமானை போல தலைவரை சந்தித்த பலர் பேசியிருக்கிறார்கள்.   ஈழத்து உணவுக்கு தனி சிறப்பு இருக்கு.  தலைவரும் பல தளபதிகளும் சமையல் கலையில் வல்லவர்கள்.அடெல் பாலசிங்கம் கூட நிறைய இடங்களில் தளபதிகள் இணைந்து சமைப்பதை பற்றியும், தலைவரின் சமையல் திறமையை பற்றியும் பேசியிருக்கிறார்கள். அடெல் பாலசிங்கம் இறைச்சி சாப்பிட மாட்டா, தலைவருக்கு சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுபவர்களை கண்டால் வியப்பாக இருக்குமாம். அடெல் பாலசிங்கத்தின் 'என் பார்வையில் பிரபாகரன்' கட்டுரையில் இருந்து சில பகுதிகள் 👇 இது அடெல் பால்சிங்கமும் சொல்லியிருக்கிறார், அண்ணன் திருமாவும் சொல்லியிருக்கிறார்.  அண்ணன் திருமா பேசும் காணொளி இணைப்பு copy & paste the following link on your browser for video  https://twitter.com/mrpaluvets/status/1201838877746417664?s=19  எங்கள் வீட்டில் எல்லா ஆண்களும் சமைப்பார்கள். ஈழத்து வாழ்வியல் தனித்துவங்களில் சமையலுக்கு ஒரு முக்கியமான இடம் இருக்கு. சீமான் சொல்வ...

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்

மலையகத் தமிழரும் ஜி ஜி பொன்னம்பலமும்  மலையகத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான உறவு தொடர்பான உரையாடல்கள், வரலாறு, எல்லாமே ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான இரண்டு மூன்று வருட பாராளுமன்ற நடவடிக்கைகளை மையப்படுத்தியே இருக்கின்றது. ஜி ஜி பொன்னம்பலம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்புக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு, பன்னெடுங்காலமாக, மலையகத் தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையிலான அரசியல் உறவை மாற்றியமைத்த, அல்லது அந்த உறவில் தாக்கத்தை, விரிசலை ஏற்படுத்திய சம்பவமாக சொல்லப்பட்டு வருகிறது. இதை ஒரு குற்றச்சாட்டு என்று சொல்வதை விட, ஒரு அப்பட்டமான, அபாண்டமான பொய் என்றே சொல்லலாம்.  அந்த காலத்தையும், அந்த காலத்தில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், அதன் தாக்கங்கள், அதற்கு ஆதரவு தெரிவித்தோர், எதிர்ப்பு தெரிவித்தோர், என்று எல்லா செய்திகளையும், வரலாறுகளையும் ஆதாரங்களுடன் நாங்கள் மீளாய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.  மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிப்பு தொடர்பான விடயத்தில் ஈழத்தமிழர் பிரதிநிதியாக இருந்...

யாழ் நூலகத்தை எரித்த சிங்கள அமைச்சரை பழி தீர்த்த புலிகளின் வரலாறு.

படுகொலைகள் செய்தோம்,   கலவரங்கள் செய்தோம்  ஆனாலும் இந்த தமிழர்கள் அடங்க மறுக்கிறார்கள்,  அவர்களின் உரிமைகளை பறித்தாலும்,  தளராமல் போராடுகிறார்கள்,  ஏறி மிதித்தாலும்  திமிறி எழுந்து போராடுகிறார்கள்.  இனக் கலவரங்களை உண்டாக்கினோம்,  அதில் தமிழர்களின் உடல்களை வெட்டி வீசினோம்,  அவர்களின் உடமைகளை எரித்தோம்,  அவர்களை விரட்டி அடித்தோம்,  கொன்று புதைந்தோம்,  இவ்வளவு செய்தும்,  இவர்கள் அடங்க மறுக்கிறார்கள்! அடங்காபற்றுடன் இயங்கும் இவர்களை! இந்த தமிழர்களை! இயக்கும் அந்த சக்தி தான் என்ன? இவர்களை மீண்டெழ வைக்கும் அந்த உணர்வு தான் என்ன..? என்றெல்லாம் சிங்கள அரசு, அடிக்கடி எண்ணியிருக்கும்  அந்த எண்ணத்தின் விளைவு தான் தமிழர்களின் கல்வி மீதும்,  தமிழ் மீதும்  அவன் கை வைக்க காரணமா இருந்தது.! இலங்கையின் நூலக வரலாற்றில் யாழ்ப்பாணம் தான் நூலக இயக்கத்தை, வாசிப்பை நோக்கி மக்களை அணிதிரட்டும் வேலைகளில் முன்னோடியாக திகழ்ந்தது.  இலங்கையின் முதல் படிப்பகம் /Reading Room, 27/12/1915ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்...